திங்கள், 17 செப்டம்பர், 2012

சுட்டி விகடனுக்கு நன்றி

இந்த இதழில் 'பாட்டி சொல்லும் கதைகள்' பற்றிய சிறப்பான அறிமுகம் செய்துள்ளமைக்கு 'சுட்டி விகடனுக்கு' எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றியுடன்,
ருக்மணி சேஷசாயி.
--








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

96 - தந்தையின் பெருமை.


      அரசூர் என்று ஒரு கிராமம்.அந்த கிராமத்தில் நாகப்பன் என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வ்ந்தார். நாகப்பன்  நல்ல உழைப்பாளி.தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் பாடுபட்டு உழைத்து தன் குடும்பத்தைக் காத்து வ்ந்தார். மிகவும் பரோபகாரமும் ஏழைகளுக்கு இரங்கும் பண்பும் கொண்டவராக விளங்கினார். தன் வருமானத்தில் சேமித்து வைக்காமல் இல்லையென்று வருபவர்களுக்கு இல்லையென்னாமல் கொடுத்துவந்தார்.இவரது நல்ல உள்ளத்தை தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் பெற்றுப் போனவர்களும் உண்டு.
இத்தகைய உயர்ந்த மனிதரின் மனைவி கமலம். கணவருக்கேற்றகுணவதியாஇருந்தாள்.இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
அவன் பெயர் மாணிக்கம்.அடக்கமும் அன்பும் உருவானவனாக இருந்தான்.பள்ளிப் படிப்பிலும் சிறந்தவனாக விளங்கினான்.இவர்களின் குடும்பம் அமைதியும் அன்பும் மகிழ்ச்சியும் கொண்டு திகழ்ந்தது.
காலம்  ஓடியது. ஒருஆண்டு வெள்ளத்தாலும் மறுஆண்டு வறட்சியாலும் அரசூர் பஞ்சத்துக்கு ஆளானது.அந்த நிலையிலும் தன்னிடம் வருபவர்களுக்கு வீடு நிலம் இவற்றை விற்றும் அடகு வைத்தும் உதவி வ்ந்தார் நாகப்பன். இப்போது உட்கார வீடில்லை.உழுது பயிரிட நிலமில்லை. நோய்க்கு மருந்து வாங்க இயலவில்லை. பசிக்குச் சோறில்லை. 
இவரது நிலைமையைத் தெரிந்து கொண்டவர்கள் இவரிடம் உதவி பெற்றுப் போனவர்கள் யாரும் இவரிடம் வருவதை நிறுத்திவிட்டனர்.
"தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும் .இது தெரியாமல் என்னமோ கர்ணப் பிரபு போல அள்ளிக் கொடுத்துகிட்டிருந்தா இப்படித்தான் தெருவில் நிக்கணும்"என்று கூசாமல் பேசி இவர் தங்களிடம்  நெருங்காமல் விலக்கி வைத்தனர். நாகப்பனும் தான் செய்த உதவியை நினைத்துப் பார்த்தவரில்லை.தன்னிடம் உதவி பெற்றுப் போனவர்கள் வளமுடன் வாழ்வதை  அறிந்து தனக்குள் மகிழ்ந்தார்.
ஊரின் எல்லையில் ஒரு குடிசை அமைத்துத் தங்கியிருக்கலானார்.உடல் நலிவடைந்து விட்டதால் படுத்தபடியே இறைவனை எண்ணி வாழ்ந்து வ்ந்தார்.ஒருநாள் இவரைத் தேடி அவ்வூரின் பெருந்தனவந்தர் ஒருவர் வ்ந்தார்.அவரை வரவேற்று அமரச் சொன்னார் நாகப்பன்.
ஆனால் அவர் அமராமல் நாகப்பனிடம் கடுமையாகப் பேசினார்."உன் ஊதாரித்தனத்தினால் இப்போது இந்த நிலையை அடைந்திருக்கிறாய். வாரிக் கொடுத்ததினால் நீ வள்ளலாகிவிட்டாயா? கடன்காரனாகத்தானே இருக்கிறாய்?"
நாகப்பன்  திடுக்கிட்டார்."ஐயா. நான் யாருக்கும் கடன்பட வில்லையே.எல்லோருக்கும் பணம் கொடுத்து விட்டேனே"
"ஆனால் என்னை மறந்துவிட்டாய்.என்னிடம் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாயா?அது போகட்டும் இந்த ஊரில் பள்ளி கட்ட என்று உன்னிடம் கேட்டபோது ஐந்தாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னாயே.அதைக் கொடுக்க முடிந்ததா உன்னால்?"
நாகப்பன் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார்.அவர் கண்களில் நீர் கோர்த்ததைக் கண்டார்  தனவந்தர்.
"சரி நாகப்பா. இனியும் இதுபோல் தானம் தருமம் என்று சொல்லிவிட்டு கஷ்டப் படாதே.எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டாம் அந்த பள்ளிக்கூடத்துக்கான பணமும் நீ தரவேண்டாம் வீட்டை நன்கு கவனித்துக் கொள். அதைச் சொல்லிப் போகவே வந்தேன்."
நாகப்பன் நன்றியுடன் கைகூப்பினார்.
அதன்பின் அவர் மனம் கடன்பட்டவன் மனம் போலத் துடித்தது. மாணிக்கம் தந்தையின் நிலை பொறுக்காமல் வேறு ஊருக்குச் சென்று விடலாம் என்றபோது மறுத்தார்.கடனாளியாக இருந்து ஊரைவிட்டு ஓடத் தயாராக இல்லை.என்றார்.மாணிக்கம் தான் மட்டும் பட்டினம் சென்று ஏதேனும் வேலை தேடி சம்பாதிப்பதாகக் கூறிப் புறப்பட்டான்.
நகரத்துள் நுழைந்த மாணிக்கம் ஒரு நல்லவரைச் சந்தித்தான். அவரும் மாணிக்கத்தின் முகத்தில் தோன்றிய கள்ளமில்லாத் தன்மையைப் பார்த்துத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்துச்  சென்றார்.
அவரது பஞ்சு வியாபாரத்தை நன்கு கவனித்துக் கொண்டான்.கூடவே அவனது படிப்புக்கும் உதவி செய்தார் அந்தப் பெரியவர்.மாணிக்கத்திற்கு  பதினெட்டு வயதானதால்  இப்போது அவனால் தனியாகத் தேர்வு எழுத முடிந்தது.
மாணிக்கம் தேர்வில் வெற்றி பெற்றதைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்க விரும்புவதாகச் சொன்னதை ஏற்றுக் கொண்டார் அந்தப் பெரியவர்.
"மாணிக்கம், நீ இங்கு வந்து மூன்று வருடமாச்சு.உன்பெற்றோரைப் பார்க்கப் போகவேண்டியது உண்மைதான்.உனக்காக நான் இதுவரை சம்பளமாக எதுவும் கொடுக்கவில்லை.என் வியாபாரத்தில் நீ உழைக்கும் பங்குதாரராக இருக்கிறாய்.மூன்று ஆண்டுகளில் உன் பங்காக இந்த இரண்டு லக்ஷம் ரூபாயைத் தருகிறேன்.உன்தந்தையிடம் கொடுத்துவிட்டு சீக்கிரமே இங்கு வந்துவிடு."என்று கூறி அவனை அனுப்பிவைத்தார்.மகிழ்ச்சியுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்  கொண்ட மாணிக்கம் அவரை வணங்கி விட்டு அரசூருக்குப் புறப்பட்டான்.
ஊருக்கு வெளியே உள்ள குடிசையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த நாகப்பன் மகனைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.
பெற்றோரை வணங்கி மகிழ்ந்தவன் அவர்களுக்கு வேண்டிய உணவு உடை இவற்றையும் தான் சம்பாதித்த இரண்டு லக்ஷத்தையும் கொடுத்தான். நாகப்பன் மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
அப்போது "என்ன நாகப்பா, என்னைப் பார்க்கணும்னு சொன்னியாமே உன் மகன் மாணிக்கம்தான் அழைத்தான். என்ன விஷயம்?" 'என்றபடியே உள்ளே நுழைந்தார். அவருடன் நாகப்பனின் நிலையை அறிய இன்னும் இரண்டு மூன்று பேர் உடன் நுழைந்தனர்.
"வாங்கய்யா," என அழைத்த மாணிக்கம் தன் தந்தையின் கையில் பதினைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்து "அப்பா. இவருக்குப் பணம் திருப்பிக் கொடுக்க முடியலைஎன்னுதானே ராவும் பகலும் வருத்தப் பட்டீங்க. வட்டியோட அவருகிட்ட இந்தப் பணத்தை உங்க கையால குடுங்கப்பா"என்றான்.
அத்துடன்" இன்னொரு பத்தாயிரத்தைப் பள்ளிக்கூட வளர்ச்சிக்குக் குடுங்கப்பா. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்திட்டீங்கப்பா. இனியாவது சந்தோஷமா இருங்கப்பா".என்றவன் தன் தந்தையின் காலடியில் அமர்ந்து கண்ணீர் விட்டான்.
சோர்ந்து முடங்கியாமர்ந்திருந்த நாகப்பன் புது தெம்புடன்  நிமிர்ந்து நின்றார்.பெருந்தனவந்தரும் மகிழ்ந்தார்.
"நாகப்பா இப்படிப்பட்ட மகனைப் பெற்ற நீ ரொம்பக் குடுத்து வச்சவனப்பா.இந்தமாதிரி அருமையான பிள்ளையைப் பெற நீ ரொம்பத் தவம் செய்திருக்கே."
உடன் வந்தவரோ"ஆமாம் நாகப்பா, நீ இதுவரை செய்திருக்கும் தான தருமந்தான் உன்பிள்ளை இவ்வளவு உயர்ந்தவனாயிருக்கக் காரணம்." வன்று வாயார வாழ்த்திச் சென்றனர்.
அவர்களின் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் தன் மகனை அணைத்துக் கொண்டார் நாகப்பன்.
பெற்றோரின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த மாணிக்கம் தன் தகப்பனார் பழையபடி சிறந்த உயர்ந்த இடத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் புறப்பட்டான்.
அவன் செல்வதைப் பார்த்த தனவந்தர்,  
                     மகன்தந்தைக்கு    ஆற்றும்   உதவி  இவன்தந்தை 
                     என் நோற்றான்   கொல்எனும்    சொல்.
இந்தக்குறளை மெய்ப்பித்துவிட்டான்  மாணிக்கம். உண்மையாகவே இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.என்றார் மகிழ்வுடன்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com